The Tamil Literary Garden is unique in being the only one in the world dedicated to the promotion of Tamil internationally. Though Tamil is an ancient language, one of the oldest in the world with significance to global literature, scant little has been done to date to actively promote or celebrate the language and contemporary authors who have contributed to its growth. Hence the focus of this organization is on supporting translation of Tamil literature, scholarship to students, revival of ancient Tamil Theatre, sponsoring
lecture series, commissioning publications, book launches, and workshops. In its annual, globally awaited awards ceremony Tamil Literary Garden recognizes significant achievements in Tamil in a number of genres and fields including Lifetime Achievement in Tamil. Donations to the organization are crucial to keep Tamil alive and to bring the best of what we have to offer to the world. It is a charitable organization and your donations are tax-deductible.
(Charitable Registration Number 86107 1371 RR0001)
Founded in 2001 and registered as a charitable organization in Toronto, the Tamil Literary Garden is committed to the promotion of studies and literary activities in Tamil, both nationally and internationally. Its mandate includes promoting creative writing, translations, book releases, awards, conferences, and workshops.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும்.
தமிழ் இலக்கியத் தோட்டம் 2023 - இயல் விருது
ஆர்.பாலகிருஷ்ணன்
சிந்துவெளி ஆய்வாளராகிய திரு ஆர். பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப்
பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல, அது ஒரு நாகரிகத்தின்
மொழி’ என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம்’ என்றும்
தொடர்ந்து வலியுறுத்திவரும் இவர், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 1958இல் பிறந்தார்.
முதுகலை தமிழ் இலக்கியமும் இதழியல் பட்டயமும் பெற்று பத்திரிக்கையாளராகப் பணியைத்
தொடங்கினார். பின்னர், இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை தமிழிலேயே முதன்முதலில்
எழுதி வென்று 1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் ஒடிசா மாநிலத்தின்
பணித்தொகுதியில் இணைந்தார்.
தற்போது இவர் சென்னையிலிருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஓர்
அங்கமான சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
‘நான் ஒரு தமிழ் மாணவன், அதுவே எனது அடையாளம்' என்று கூறும் பாலகிருஷ்ணன் தனது
வாழ்நாள் முழுக்க இடையறாது பழந்தமிழ் இலக்கியம், சிந்துவெளிப் பண்பாடு
ஆகியவற்றிற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். சிந்துவெளிப் பண்பாடு மற்றும் தமிழ்த்
தொன்மங்களின் தோற்றுவாய் குறித்த புரிதல்களுக்கு இடப்பெயராய்வுகள் வலிமை தரும்
என்பதைச் சான்றுடன் நிறுவியுள்ளார். இந்தியாவை ‘உருக்குப் பானை’ என்று சொல்வதற்குப்
பதிலாக இந்தியத் துணைகண்டத்தின் பன்மியத்தை ஆழமாக வலியுறுத்தும் ‘இந்தியா ஒரு
மழைக்காடு’ (Rain forest) என்கிற கருத்தாக்கத்தைத் தொடர்ந்து பொதுவெளியில் பேசியும்
எழுதியும் வருகிறார்.
இந்தியவியல், மானிடவியல், தொல்லியல், இடப்பெயராய்வு ஆகியவை இவரது முனைப்புக்
களங்களாகும். சிந்துவெளிப் பண்பாடு செழித்த ’கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை’
(2018), இப்படி ஒரு தீயா? (2023) ஆகிய இரு நூல்களும் சமகாலத்திற்கேற்ற இவரது குறள்
தழுவிய காதல் கவிதைகளின் தொகுப்புகளாகும்.
மேலும் அன்புள்ள அம்மா (1991), சிறகுக்குள் வானம் (2012) ஆகிய கவிதை நூல்களை
எழுதியுள்ளார். தனது வாழ்கை அனுபவங்களை இரண்டாம் சுற்று (2018), குன்றென நிமிர்ந்து
நில் (2018), தமிழ் நெடுஞ்சாலை (2022) ஆகிய நூல்களின் வழியே பகிர்ந்துள்ளார்.
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் (2016), Journey of a Civilization: Indus to
Vaigai (2019), கடவுள் ஆயினும் ஆக (2021), அணி நடை எருமை (2022), ஓர் ஏர் உழவன்
(2022), ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை (தமிழ்ப் பதிப்பு) (2023)
ஆகியவை இவரது ஆராய்ச்சி நூல்களாகும்.
இத்துடன் பல்வேறு முக்கியமான ஆய்விதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வுக்
கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
‘சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' என்று கடந்த முப்பது
ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வலியுறுத்திவரும் இந்தியவியல், திராவிடவியல்,
சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டி கனடா தமிழ்
இலக்கியத் தோட்டம் அவருக்கு 2023ம் ஆண்டுக்கான வாழ்நாள் தமிழ் இலக்கிய
சாதனையான இயல் விருதை வழங்குகிறது. விழா 20 அக்டோபர் 2024 அன்று
ரொறொன்ரோவில் நடைபெறும்.
தமிழ் இலக்கியத் தோட்டம் 2022 - விருதுகள்
2022 Awards Full Video
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022ம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு, 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் திகதி ரொறன்ரோவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒளித்தொகுப்பை இங்கே காணலாம்.